கடலாடி - Kadaladi

கடலாடி - Kadaladi Incredible ! city. Kadaladi city is part of Ramanathapuram (Lok Sabha constituency). Kadaladi (கடலாடி) is about 90 km from Madurai - the Small Town in Tamil Nadu.

இது கடலாடி நண்பர்களை ஒன்று சேர்ப்பதர்க்காக உருவாக்கப்பட்டது இந்த சமூகம். சொந்த ஊர் கடலாடியாக (Ramanathapuram Dist) இருக்கும் நண்பர்களை இந்த கிளப்பில் தேடிக்கொள்ளுங்கள். As of 2001 India censusGRIndia, kadaladi had a population of 13,135. Males constitute 48% of the population and females 52%. kadaladi has an average literacy rate of 75%, higher than the national average of 59.5%: male literacy is

80%, and female literacy is 71%. In kadaladi, 12% of the population is under 6 years of age. Agriculture and animal breeding are the main businesses of the people of this region. There are 19 schools (9 Primary, 2 upper Primary, 5 Secondary and 3 Higher Secondary schools.) and an Arts and Science College serving the student community in this town.
**********************************************************

Kadaladi is a taluk headquarters town in the southern side of Ramanathapuram District, Tamil Nadu. It lies on the State Highway connecting Sayalkudi and Mudukulathur, at about 15 km south of Mudukulathur. Sikkal, Perunali and kilakkarai are other nearby places. Rameshwaram, Uthirakosamangai, Mariuor, Kamudthi and Erwadi are pilgrim centers close to Kadaladi. Chitrangudi Bird Sanctuary, Nalla thanni island, Uppu thanni island, Valinokkam Ship breaking port, Gulf of Mannar Marine Biosphere Reserve and Dhanushkodi are among the worth visiting spots in the neighborhood. Paramakkudi Railway Station and Ramanathapuram Railway Station are the nearest railheads. The airports close to Kadaladi are Madurai Airport (towards north) and Tuticorin Airport (towards south).
***********************************************************

Pincode: 623703
STD Code: 04576
District : Ramanathapuram
State : Tamil Nadu
Country : India
***********************************************************

Education Schools Colleges:
Schools in Kadaladi
1 . Panchayat Union Middle School

2 . Panchayat Union Primary School

3 . Government Higher Secondary School

4 . Sri Saraswathi Vidhyalaya Nursery School

5 . Kamarajar Matriculation school
***********************************************************

Year Winner Name Vote% Party
----------------------------------------------------------------
2006 THANGAVELAN.SUBA. 44.88 DMK
2001 BALAKRISHNAN.S 48.1 TMC(M)
1996 S.P. THANGAVELAN 53.23 DMK
1991 SATHIAMOORTHY V. 55.65 ADK
1989 AMEETH IBRAHIM, A.M. 30.36 DMK
1984 A.PIRANAVANATHAN 39.81 DMK
1980 SATHIAMOORTHY, S. 51.41 ADK
1977 R.C. SUBRAMANIAN 36.56 ADK

28/06/2025

இது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

#கடலாடி | |

 #கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியர் மற்றும் முதுகலைபொருளியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளா...
13/06/2025

#கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியர் மற்றும் முதுகலைபொருளியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள்செயல்படுகிறது. 600 மாணவர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து கல்வி பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 33 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர் இரண்டு பணியிடம் காலியாக உள்ளது.

மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

கடந்த ஜூன் 2 முதல் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளியில் வணிகவியல், பொருளியல்பாடத்திற்கான ஆசிரியர்கள் பணியிடம் அனுமதி இருந்தும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. வரக்கூடிய ஆசிரியர்கள்கலந்தாய்வில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆசிரியர்கள் இல்லாமல் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பள்ளியின் தரைத்தளங்கள் சேதமடைந்தும், கழிப்பறை வசதி குறைவாக உள்ளதால் மாணவர்கள்சிரமப்படுகின்றனர். பெரும்பாலான வகுப்பறைகளில் மின்சார வசதி இல்லை.

எனவே குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றனர்.

கடலாடியில் கண்டெடுக்கப்பட்ட 280 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் செப்புபட்டையம்!கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு, சி...
10/04/2025

கடலாடியில் கண்டெடுக்கப்பட்ட 280 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் செப்புபட்டையம்!

கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகுமார சேதுபதி ஆட்சியில், அவருடைய பாளையக்காரரான சாயல்குடி ஜமீந்தார், பிராமணருக்கு அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுத்த செப்புப்பட்டையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது பெற்றோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டையம் இருப்பதாக சென்னையில் இருக்கும் ஆதித்யா சம்பத்குமார், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு கொடுத்த தகவலின் பேரில், கடலாடியில் உள்ள காந்தி, பாண்டீஸ்வரி இல்லத்தில் இருந்த பட்டையம் படித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: "600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட பட்டையத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29-ம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விசைய ரகுனாதச் சேதுபதி என உள்ளது. எனினும் இதன் ஆண்டு சிவகுமார சேதுபதியை குறிக்கிறது. அவர் ஆட்சியில், சேது சமஸ்தானத்தின், பாளையம் கிடாத்திருக்கை நாட்டில், சாயல்குடியிலிருக்கும் குமாரமுத்து விசைய ரகுனாத அய்வாய்ப்புலி பெரிய கறுத்துடையார் சேருவைகாரர், சேது மார்க்கம் கடலாடியில், விசைய ரெகுனாதப் பேட்டையில், அக்கிரகாரம் ஏற்படுத்தி அதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் வெங்கிட்டராம அய்யங்காருக்கு அக்கிரகாரப் பிரதிட்டை பண்ணிக் கொடுத்து, தனது காணியாட்சியாய் வருகிற காக்கைகுட்டம் என்ற ஊரை கல்லுங் காவேரி புல்லும் பூமியும் உள்ளவரை சர்வமானியமாக கொடுத்துள்ளார்.

இத்தானத்தை பாதுகாப்பவர்கள் கங்கைக் கரையில் சிவ, விஷ்ணு, பிரம்மா பிரதிஷ்ட்டை, கோடி கன்னியர் தானம், கோதானம், சூரிய, சந்திர கிரகண காலத்தில் பண்ணினால் எந்தப்பலனுண்டோ அதை அனுபவிப்பர். இதற்கு யாராவது தீங்கு செய்தால் கங்கைக் கரையிலே, காராம் பசுவை கொன்ன தோஷத்திலே போவார்கள் எனவும், இதன் சமஸ்கிருதப் பகுதியில் பிறர் கொடுத்ததை பாதுகாத்தால் இரு மடங்கு புண்ணியம். அதை அபகரித்தால் தனது புண்ணியமும் போகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பரிக்கு நகுலன், கரிக்கு இந்திரன், அனும கேதனன், கெருட கேதனன், சிங்க கேதனன் உள்ளிட்ட மன்னரின் 74 விருதுப் பெயர்கள் இதில் உள்ளன. மானியமாக கொடுக்கப்பட்ட காக்கைகுட்டம் கடலாடி அருகிலுள்ளது.

கி.பி.18-ம் நூற்றாண்டு அமைப்பிலுள்ள சாயல்குடி அரண்மனையின் தற்போதைய ஜமீந்தாரும் அவர் தந்தையும் விசைய ரகுனாத பெரிய கறுத்துடையார் சேருவைகாரர் பட்டத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாலும், கிடாத்திருக்கை எனும் பெயரில் பாளையம் இருந்தாலும் அதன் ஆளுநர் சாயல்குடியில் இருப்பதாக பட்டையத்தில் கூறப்பட்டுள்ளதாலும் சாயல்குடி ஜமீந்தார் தான் கிடாத்திருக்கை பாளையக்காரர் என அறியமுடிகிறது. நாயக்கர் போல சேதுபதிகளும் தங்கள் நாட்டை பல பாளையங்களாக பிரித்து ஆண்டுள்ளனர். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட இடம், ஊரை பிறருக்கு விற்கும்போது செப்புப்பட்டையம் நில ஆவணமாக வாங்கியவர்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம்". இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://tamil.hindustantimes.com/tamilnadu/king-sethupathis-280-years-old-copper-belt-found-in-kadaladi-at-ramanathapuram-district-131744163657515.html

| #கடலாடி | | #சாயல்குடி | | | |

08/04/2025

30/03/2025

14/03/2025
 #கடலாடி  #மாரந்தை
25/12/2024

#கடலாடி #மாரந்தை

தேசிய அளவிலான  கபடி போட்டியில் கடலாடி  P.T ரஞ்சித்குமார் அவர்களின் மகள் சம்யுக்தா விளையாடியுள்ளார் என்பதை மிகவும் பெருமை...
25/11/2024

தேசிய அளவிலான கபடி போட்டியில் கடலாடி P.T ரஞ்சித்குமார் அவர்களின் மகள் சம்யுக்தா விளையாடியுள்ளார் என்பதை மிகவும் பெருமை யுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மென்மேலும் நிறைய பரிசுகளை வென்று நமது ஊருக்கும், நமது மாவட்டத்திற்கும், நமது தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் மென்று அவரை மனதார பாராட்டுகின்றோம்

| | | |

நமது கடலாடியில் சில பகுதிகளின் street view கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  #கடலாடி |   |
07/11/2024

நமது கடலாடியில் சில பகுதிகளின் street view கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

| #கடலாடி | |

Explore a place in a more immersive way in Google Maps.

  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த மாரிமுத்து கைது!   |  #கடலாடி  | ...
19/09/2024

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த மாரிமுத்து கைது!

| #கடலாடி |

 #கடலாடி
09/08/2024

#கடலாடி

20/02/2024

மாநில கபடி போட்டியில் தங்கம் வென்ற நமது கடலாடியின் தங்க மங்கைகளுக்கு, அரசு மேல் நிலைப்பள்ளியின் அணைத்து ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊர் பெரியவர்களும் இணைந்து அவர்களுக்கு வாழ்த்துக்களும் மரியாதைகளும் செய்யப்பட்டது. மேலும் தாங்கள் வென்ற தங்க கோப்பை மற்றும் பதக்கங்களுடன் அனைத்து மாணவர்களுடன் ஊர்வலமாக சென்று தங்கள் வெற்றியை உற்சாகமாக ஊர் மக்களிடம் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றனர்.
#கடலாடி

Address

Ramanathapuram
623703

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலாடி - Kadaladi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share