01/09/2020
We support farmer.. Who not stop working time of lockdown provided un interrupted food supply..
இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் - 23.9 % ஆக வீழ்ச்சியடைந்தது .
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிகம் , ஹோட்டல் , கட்டுமானம் ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன .
குறிப்பாகத் தொழில் துறை -38.1 % , உற்பத்தித் துறை -39.3 % , கட்டுமானத் துறை -50.3 % , நிலக்கரித்துறை -23.3 % என்று வீழ்ச்சி கண்டது . நம்பிக்கை தரும் வகையில் விவசாயத்துறை மட்டுமே 3.4 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது . கடந்த ஆண்டு விவசாயத் துறையின் வளர்ச்சி 3 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது .
விவசாயத்துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் கடுமையான சரிவைக் கண்டுள்ளன . இந்த பொருளாதார வீழ்ச்சியானது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் . பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லா - நினா விளைவால் வழக்கமாக ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டு 9.8 % அதிகமாகப் பெய்தது .
இந்த மழை அளவே விவசாயத்துறை உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்தது . இதுவரை இல்லாதபடி இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சியடைந்த போதிலும் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டிருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது
.1